"குரே குரே" ஆஸ்திரேலியா "ஷிந்தாபாட்" பாகிஸ்தான்




நடப்பு உலகசம்பியன் அணி மட்டுமல்ல தரவரிசையில் நீண்டகாலமாக முதல் நிலையில் வெற்றி நடை போட்ட ஆஸ்திரேலியா தரவரிசையில் கீழே இறங்கிக்கொண்டு இருக்கிறதே என்று விளையாட்டு ஆர்வலர்கள் ஆராய்வதும் ரசிகர்கள் திட்டுவதும் அவர்களின் வெற்றிக்கான ஏக்கத்துக்காகவும் வெற்றிதீனி போட்டிருக்கிறது ஆஸ்திரேலியா.
களத்தடுப்பில் மிகவும் கவனக்குறைவுகளும் பிடித்தவறுகளுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தாலும் துடுப்பாட்டத்தில் நின்று நிலைத்தாடி வெற்றி பெற்றுவிட்டது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாயில் "சப்பல்" கிண்ணத்துக்காக இரண்டாவது போட்டியில் தான் இந்த வெற்றி.

வெற்றி பெற்றாலும் அந்த அணி மீது பல பல்வீனங்களை அவதானிக்க முடிந்தது.
முன்னெல்லாம் யாராவது முன்னணி வீரர்கள் ஒய்வுபெற்றுவிட்டால் அதற்கு சரியான பிரதியிடப்பட்ட வீரரோடு களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி இப்போது வானுயர்ந்து வரும் பந்தை கணக்கெடுத்து பிடியெடுக்க தெரியாத வீரர்களை இணைத்திருக்கிறார்களோ என்று எண்ணும்படியாக அமைந்தது அந்த போட்டி.ஆனால் அணித்தலைவர் கிளார்க் கண்மூடித்திறக்க முதல் எடுத்த பிடி கொஞ்சம் "ஆ" என்று சொல்ல வைத்தது.



சுழல் பந்து வீச்சாளர்களிடம் தவறான தீர்மானமெடுத்து துடுப்பாடி சுருண்டு விடும் ஆஸ்திரேலிய அணி முன்னர் பின்னர் அவதானத்துடுப்பாட்ட முறையில் சிறப்பாக துடுப்பாடி வந்திருந்தது. ஆனால் மீண்டும் சாதாரண சுழல் வீச்சாளர்களிடம் சுழல ஆரம்பித்துவிட்டது. இங்கு இரண்டாவது போட்டியில் யூனுஸ்கான் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்த அஃபிரிடி மற்றும் புதிய வீரர் அஜ்மல் ஆகியோரை தொடர்ந்து வீச விடாமல் வேகப்பந்து வீச்சாளர்களை அழைத்ததால் ஆஸ்திரேலிய அணி வீரர்களூக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று முணுமுணுத்ததை அவதானிக்க முடிந்தது.ஆனால் இறுதியில் அஃப்பிரிடி தனக்குரிய பந்துபரிமாற்றங்களை வீசி முடித்துவிட்டார்.அஜ்மலுக்கு இன்னும் மூன்று பரிமாற்றங்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




என்றாலும் அணித்தலைவர் கிளார்க் தன் இலக்கை இழக்காமல் எத்தனை பந்துகளை இழந்தாவது நின்று நிலைத்தாடி வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்வேன் என்று விடாபிடியாக இருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.அடுத்தடுத்து இலக்குகள் இழந்தவேளை கிளார்க் மற்றும் சிமண்ட்ஸ் வந்தார்கள். சிமண்ட்ஸ் தனது வழமையான பாணியில் வேகமாக ஓட்டங்களை எடுத்தது மட்டுமல்லாமல் இலக்கை நெருங்கிவிட்டு விடைபெற்றார் அஃப்பிரிடியின் சுழல் பந்தில்.தொடர்ந்து அணித்தலவர் வெற்றிவரை கொண்டுசென்றார்.
பாகிஸ்தான் அணியில் களத்தடுப்பில் பலவீனம் என்னவெனில் ஆஸ்திரேலிய அணியின் ஓட்டம் ஒடும் வேகத்துக்கு ஏற்றவாறு அமையவில்லை என்பதுதான்.களத்தடுப்பாளர்களின் கைகளுக்குளேயே அடித்துவிட்டு ஒரு ஓட்டம் எடுத்தது மட்டுமில்லாமல் சிலவேளைகளில் இரண்டு ஓட்டம் எடுத்ததும் ஆஸ்திரேலிய ஓட்டவேகத்தை அதிகரித்திருந்தது.இதே இடத்தில் வரும் பந்துகளை எல்லாம் நொருக்கும் வீரர் கில்கிறிஸ்ட் எல்லாம் இருந்திருந்தால் கதை வேறு.ஆஸ்திரேலிய அணிக்கு கில்கிறிஸ்ட் மற்றும் கைடன் போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றது பெரிய தூண்களை இழந்து விட்டார்கள் என்பது உண்மைதான்

சில சந்தர்ப்பங்களில் விளையாட்டு செய்திகளை மட்டுமே அறிபவனாக இருந்த எனக்கு
பல நாள்களுக்கு பிறகு இந்த பந்தயம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. முந்தி எல்லாம் எங்கு தொலைக்காட்சில் போட்டியை கண்டு களிக்கலாம் என்று அலைந்துதிரிவது நினைவில் வருகிறது.அந்த நகைச்சுவையான நினைவுகளுக்கு வேறு ஒரு பதிவுதான் சிறந்தது.
நீண்ட நாளுக்கு பிறகு பார்த்ததால் எனக்கு சிமண்ட்ஸை பார்த்தவுடன் ஏங்கிப்போய் விட்டேன்.
எவ்வளவு குழு குழு என்று பருமனாக இருந்து இப்போது வெறும் சின்ன வயதுக்காரனைப்போல இருந்ததுதான்.
பருமனாக இருந்தபோதே ஓடும் வேகம் எல்லோருக்கும் தெரியும், பருமன் குறைந்து விட்டால் கொஞ்சம் வேகமாக ஓடுவார் என்று பாகிஸ்தான் அணி வீரர்கள் அவதானமாக இருந்திருக்கலாமல்லவா?



இருந்தாலும் இரண்டு போட்டிகளிலும் ஒவ்வொன்றாக வெற்றி பெற்று சுற்றுபோட்டி சமனிலையில் ஓடிக்கொண்டிருக்கின்றது
அங்குள்ள ரசிகர்களின் கோஷங்களைப்போலவே
"குரே குரே ஆஸ்திரேலியா
ஷிந்தாபாட் பாகிஸ்தான்"

No comments: