கொழும்பில வாத்தியார்

கொஞ்சம் உஷார்


சும்மா சொல்ல கூடாது எங்கட வாத்தியார் பிளேன்ல ஏறி வரும்போது கொஞ்சம் பயந்து போனார் எண்டது உண்மைதான்.ஏன்னெண்டால் அது முதல் பயணம் தானே.
முதன்முதல் பிளேன்ல ஏறும்போது யாருக்கு தான் பயம் வராது.அந்தரத்தில பறக்க போகுது எண்டால் யாருக்கும் தான் பயப்பீதி வராது.மற்றும்படி அவர் பயந்தது மாதிரி நினைக்கதேவையில்ல.
ஏனெண்டால் "அவர் ஊரில படிப்பிக்கேக்க எத்தினை பொடியள் பயந்தவங்கள்,அந்த ஆள் பிரம்பும் கொண்டு ஒரு நடையும் நடந்து வந்தார் எண்டால் தோளுக்கு மேல வளந்த பொடியளும் பயந்து சத்தம் போடாமல் ஒதுங்கி போய் இருப்பாங்கள்".
யாழ்ப்பாணத்தில இருந்து பிளேன் ஏறி வர எத்தனையோ பதிவுகள்,அனுமதிகள், அது இது எண்டு படுற கஷ்டத்தில பேசாமல் இருக்கலாம் எண்டு இருந்திருந்து வாத்தியார் மட்டுமில்ல எல்லாருக்கும் பிளேன் ஏறி வாறதில கொஞ்சம் தயக்கம்.

அது மட்டுமில்ல வாத்தியார் பள்ளிக்கூடத்தில படிப்பிக்கிறதும் மேலதிகமாக வீட்டிலையும் ஊர் பொடியளுக்கு படிப்பிக்கிறதும் எண்டு அவருடைய காலமும் போய்விட்டுது.அதனாலே அவர் கொழும்புக்கு வாற தேவையும் இருக்கவில்லை.அப்படி அவர் படிப்பித்ததால் ஊரில நல்ல பெயர் எடுத்தவர் வாத்தியார்.
அவர் கொழும்புக்கு போறார் எண்டு எல்லாரும் வீடுக்கு குசலம் விசாரிக்க போனவை .
ஏனெண்டால் அவர் கொழும்புக்கு போய் அப்பிடியே அவரிடைய மகள் லண்டனில இருக்கிறாள்,அங்க போகபோறார் எண்டு தான் ஊராவீட்டு ஆக்கள் எல்லாம் வந்தவை அங்கங்கு ஒவ்வொரு பிஸ்கட் பெட்டியும் வாங்கிக்கொண்டு,
இதை ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்கிறார் வாத்தியார் கொழும்பில." எங்கட சனம் இந்த பிஸ்கட் பெட்டியும் இல்லாவிட்டால் மற்றவை வீட்டுக்கு விருந்தினராக போக மாட்டுதுகள் " எண்டு மனதுக்குள் சிரிச்சுக்கொண்டு வாத்தியார் இருக்கிறார். .

வாத்தியாருக்கு கொழும்புக்கு வாறது எண்டால் கொஞ்சமும் விருப்பமில்ல.
ஏன்னெண்டால் ஊரில அக்கம் பக்கம் சனத்தோட சந்தோசமாக உல்லாசமாக கதைச்சு கொண்டு இருந்தவருக்கு இங்க வந்து யாருமே தெரியாத ஊரில வந்திருக்கிறதெண்டால் அவருக்கு கொஞ்சமும் பிடிக்கேல்ல.
ஆனால் மகள் பதினைந்து வருஷத்துக்கு முதல் லண்டன் போன பிறகு அவளுக்கு இருக்கிற அந்தஸ்த்து அங்க கிடைச்சபிறகு "வாங்கோ வாங்கோ" என்று குடுத்த கரைச்சலால் தான் வெளிக்கிட்டு வந்தவர்.
மற்றும்படி அவருக்கு கொழும்பு வாழ்க்கை சிறை வாழ்க்கை எண்டு தெரியாதே? இரண்டு காலும் நீட்டி நிம்மதியாக படுக்க முடியாது எண்டு அடிக்கடி அந்த காலம் பகிடி விட்டு கதைக்கிறவருக்கு தெரியாதே கொழும்பு வாழ்க்கை அப்பிடித்தான் எண்டு.
உண்மையாக அவர் வந்த காரணம் வயதும் போய்க்கொண்டு இருக்கு அதுக்கு முதல் அந்த செல்ல மகளை பார்க்க வேண்டும் அதோட தன்னுடைய பேர்த்தி மாரையும் பார்க்க வேணும் ஏன்டா ஆர்வம் தான்.

வாத்தியார் கொஞ்சம் கூட பகிடி விடுற ஆள்.எங்கு போனாலும் தன்னுடைய பகிடியால கொஞ்ச பேரை நட்புவட்டத்துக்குள்ள கொண்டு வந்து விடுவார்.அதால வாத்தியாருக்கு போற இடத்தில போர்(பஞ்சி) அ(பி)டிக்காது.எப்பிடியும் ஒரே கலகலப்பாக தான் இருப்பார்.
அப்பிடியே கதைச்சாலும் அவர் கொழும்பில ஏமாத்தி போடுவாங்கள் எண்டு எப்பவும் கவனமாக தான் இருப்பார்.ஏனெண்டால் மகள் லண்டனில இருந்து ஒவ்வொருநாளும் தொலைபேசி அழைப்பு எடுத்து பேசினபடி.
"அப்பா அங்கினை இங்கினை வாய் பார்த்துக்கொண்டு நிண்டால் யாரும் வந்து காசுக்காக கொண்டு போடுவாங்கள்"
எண்டு மகள் எப்பவும் ஓதிக்கொண்டே இருக்கிறது....... அதைநினைச்சு நினைச்சு வாத்தியார் ரொம்ப உஷார் பாருங்கோ.


வாத்தியார் வருவார்............

1 comment:

Anonymous said...

hi karavaikural!
yen innum vaathiyaar varala?????????????????
im waiting. quick aaga send pannungo.

naanga paarakanum vaathiyaar inai;

unga site supero super.
i like toooooooooo much